காதல் விவகாரத்தில் நடந்த இரட்டை கொலை : பெண் உறவினருக்கு ஆயுள் சிறை; உதவிய நண்பருக்கு 'இரட்டை ஆயுள்'
Added : மார் 24, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



சேலம் : ஓமலுார் அருகே, 26 ஆண்டுக்கு முன், காதல் விவகாரத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் பெண்ணின் உறவினருக்கு ஆயுள் சிறையும், அவருக்கு உதவிய நண்பருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும் விதித்து, சேலம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே வட்டக்காட்டை சேர்ந்தவர் முருகேசன். இவரது உறவினர் மகளை, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் காதலித்தார். இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஊட்டி சென்றனர். பெண்ணை மீட்ட முருகேசன், வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தார்.

இருப்பினும் காதலுக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியை சேர்ந்த பெரியண்ணன், 25, சசிகுமார், 25, ஆகியோர், திருமணமான பின்பும் பெண்ணிடம் பேசி குழப்பியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த முருகேசன், அவரது நண்பர்கள் கந்தசாமி, முருகன் ஆகியோர் சேர்ந்து, பெரியண்ணன், சசிகுமாரை அங்குள்ள தென்னந்தோப்புக்கு வரவழைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின் உடல்களை டிராக்டரில் ஏற்றி, ஈரோடு மாவட்டம் சித்தோடு, ஏ.பெருமாபாளையம் அருகே வீசினர்.

அழுகிய உடல்களை மீட்டு சித்தோடு போலீசார் விசாரித்ததில் ஓமலுாரை சேர்ந்த பெரியண்ணன், சசிகுமார் சடலங்கள் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு வழக்கு மாற்றப்பட்டு, கந்தசாமி 56, முருகேசன், 58, முருகன் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. முருகன் இறந்ததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் கழுத்தை நெரித்து கொன்றது, உடல்களை கொண்டு சென்று வீசியது கந்தசாமி என தெரியவந்தது.

இதனால் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், கந்தசாமிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை, 41 ஆயிரம் ரூபாய் அபராதம்; முருகேசனுக்கு ஆயுள் தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெகநாதன் உத்தரவிட்டார். அபராத தொகையில், 30 ஆயிரம் ரூபாயை, கொலை செய்யப்பட்ட பெரியண்ணன் மனைவி வளர்மதிக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X