பள்ளியில் ஆசிரியர்களுக்கு அடி, உதை பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு
Added : மார் 24, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Parents refuse to send their children to hit and kick teachers at school   பள்ளியில் ஆசிரியர்களுக்கு அடி, உதை பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு

துாத்துக்குடி:கோவில்பட்டி அருகே அரசு உதவி பெறும் ஹிந்து துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்தனர்.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் அரசு உதவி பெறும் ஹிந்து தொடக்கப்பள்ளி உள்ளது. அதே ஊரைச் சேர்ந்தவர் முனியசாமி.

இவரது மகள் செல்வி, மருமகன் சிவலிங்கம் ஆகியோர் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் அவர்களது ஏழு வயது மகன் பிரகதீசை, ஆசிரியர் அடித்ததாக கூறி விசாரிக்க சென்றனர்.

தலைமை ஆசிரியை குருவம்மாள், 60, ஆசிரியர் பாரத் ஆகியோரை இருவரும் சேர்ந்து சரமாரியாகத் தாக்கினர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த எட்டயபுரம் போலீசார் முனியசாமி, மகள் செல்வி, மருமகன் சிவலிங்கம், செல்வியின் தாயார் மாரிச்செல்வி ஆகியோரை கைது செய்தனர்.



மறுப்பு




இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியரின் பெற்றோர், துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர்.

கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர்களை தாக்கியவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அதுவரைய பள்ளிக்கு எங்கள் குழந்தைகளை அனுப்ப மாட்டோம்' என கூறியுள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X