விஷம் குடித்த துாய்மை பணியாளர் மரணம் நிவாரணம் ரூ.6 லட்சம்; மகளுக்கு வேலை
Added : மார் 24, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Rs 6 lakh compensation for death of sanitation worker who drank poison; Work for daughter   விஷம் குடித்த துாய்மை பணியாளர் மரணம்  நிவாரணம் ரூ.6 லட்சம்; மகளுக்கு வேலை

துாத்துக்குடி:உடன்குடி பேரூராட்சியில் பதவி உயர்வுக்கு லஞ்சம் கேட்டதால் மனம் உடைந்து விஷம் குடித்த துாய்மை பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து நடந்த சமரசப்பேச்சில், நிவாரணமாக ஆறு லட்சம் ரூபாயும், அவரது மகளுக்கு பேரூராட்சியில் வேலையும் வழங்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.

துாத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில் சுடலைமாடன் 55, என்பவர் தூய்மைப் பணியாளராக பணியாற்றினார்.

அவருக்கு தூய்மைப் பணி மேற்பார்வையாளர்பதவி உயர்வு வழங்க தற்போது பேரூராட்சியின் தலைவியாக இருக்கும் ஹுமைராவின் மாமியாரும், பேரூராட்சி முன்னாள் தலைவியுமான ஆயிஷா லஞ்சம் கேட்டார். சுடலைமாடன் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை ஆயிஷா அவதுாறாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த சுடலைமாடன், மார்ச் 17ல் விஷம் குடித்தார். துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுடலை மாடன் நேற்று முன்தினம் காலை இறந்தார்.

குலசேகரப்பட்டினம் போலீசார் ஆயிஷா, செயல் அலுவலர் பாபு ஆகியோர் மீது வன்கொடுமை சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



போராட்டம்




பேரூராட்சி முன்னாள் தலைவி மற்றும் செயல் அலுவலரை கைது செய்ய வேண்டும். தற்போதைய பேரூராட்சி தலைவி ஹுமைரா மீதும் வழக்குப்பதிவு செய்து பதவி நீக்கம்வேண்டும். சுடலை மாடன் குடும்பத்துக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

அவரது மகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மைப் பணியாளர்கள் மற்றும் சுடலை மாடன் உறவினர்கள் உடன்குடியில் போராட்டம் நடத்தினர்.

அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றுக் கொள்ளவும் மறுத்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி எஸ்.பி., பாலாஜி சரவணன் தலைமையில் நடந்த சமரசப் பேச்சில், சுடலை மாடன் மகளுக்கு, சாத்தான்குளம் பேரூராட்சியில் அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டது. இழப்பீடாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட இருவரும் விரைவில் கைது செய்யப்படுவர் என எஸ்.பி., வாக்குறுதி அளித்ததால், நேற்று உடலைப் பெற்று இறுதிச் சடங்குகள் செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X