குமரி பேரூராட்சியில் தி.மு.க., நிர்வாகி தர்ணா | கன்னியாகுமரி செய்திகள்| DMK, executive dharna in Kumari municipality | Dinamalar
குமரி பேரூராட்சியில் தி.மு.க., நிர்வாகி தர்ணா
Added : மார் 25, 2023 | |
Advertisement
 
DMK, executive dharna in Kumari municipality   குமரி பேரூராட்சியில் தி.மு.க., நிர்வாகி தர்ணா

நாகர்கோவில்:கன்னியாகுமரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததை கண்டித்து, பேரூராட்சி அலுவலகத்தில் தி.மு.க., நிர்வாகி தர்ணாவில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் தி.மு.க., வசம் உள்ளது; தலைவராக ஸ்டீபன் உள்ளார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க., விவசாய அணி துணை அமைப்பாளர் ராம்சிங் என்பவர், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால், நடவடிக்கை எடுக்காததால் பேரூராட்சி அலுவலகத்தின் முன்புறம் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

'அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காததால் தர்ணா நடத்தினேன்' என ராம்சிங் தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் நாகர்கோவில் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X