அம்மணி அம்மன் மடத்தை இடித்தது தவறானது:வம்சாவளியினர் குற்றச்சாட்டு
Added : மார் 25, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

திருவண்ணாமலை;திருவண்ணாமலையில் உள்ள, அம்மணி அம்மன் மடத்தை இடித்தது தவறானது என, வம்சாவளியினர் குற்றம் சாட்டினர்.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் வடக்கு கோபுரம் அருகில் உள்ள அம்மணி அம்மன் மடத்தின் இடத்தில், பா.ஜ., பிரமுகர் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீட்டை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் கடந்த, 18-ல், இடித்து அகற்றினர். அன்று மாலை அம்மணி அம்மன் மடமும் இடிக்கப்பட்டது.

இதற்கு ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மடம் இடிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, மடத்தை சுற்றி தகர சீட்டால் வேலி போன்று அமைக்கப்பட்டு அடைக்கப்பட்டது. இந்நிலையில் இடிக்கப்பட்ட அம்மணி அம்மன் மடத்தை, பெண் சித்தர் அம்மணி அம்மனின் வம்சாவளியினர், திருவண்ணாமலை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மனைவியான அம்மணி அம்மன், 75, தலைமையில் அவரது மகன்கள், உறவினர்கள் என, 15-க்கும் மேற்பட்டோர் வந்து பார்வையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

அம்மணி அம்மன் மடத்தின் இடத்தில் இருந்த வீடு அகற்றப்பட்டது சரியானது. ஆனால், மடத்தை இடித்தது எந்த நியாயமும் கிடையாது.

இடித்தவர்கள் மீண்டும் மடத்தை கட்டிக் கொடுக்க வேண்டும். மேலும், இடிக்காமல் மீதி இருக்கும் மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பித்து பாதுகாத்து நினைவு சின்னமாக்க வேண்டும்.

காலி இடத்தில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X