கோவை:கோவை மாவட்டம், சூலுார் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 45; லாரி டிரைவர். இவரது மனைவி கவிதா, 35. இவர், கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்தார். நேற்று முன்தினம், திருட்டு வழக்கில் விசாரணைக்காக கோவை நீதிமன்றத்துக்கு கவிதா வந்தார். அங்கு அவர் மீது 'ஆசிட்'டை கணவர் ஊற்றினார். படுகாயம் அடைந்த கவிதா, கோவை அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.