பறவைகள் சரணாலய எல்லை வரையறை!
Added : மார் 25, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

திருப்பூர்-'நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லையை உறுதி செய்து, மேம்பாட்டு பணியை விரைவில் துவக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தொழில் நகரமாக விளங்கும் திருப்பூரில், ஊத்துக்குளி ரோட்டில், 340 ஏக்கர் பரப்பளவில் உள்ள நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. '181 வகை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து செல்கின்றன' என, கணக்கெடுக்கப்பட்டுள்ளது.'இயற்கை எழில் கொஞ்சும் இக்குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும்' என, இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், கடந்தாண்டு ஏப்., மாதம், தமிழக அரசு, நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. இது, இயற்கை ஆர்வலர்கள், உள்ளூர் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.இக்குளத்தையொட்டி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பினருக்கு சொந்தமான நிலமும் உள்ளது. குளத்தில் பட்டா நிலம் உள்ளதா, ஆக்கிரமிப்பு ஏதேனும் உள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகம் ஆராய்ந்து, ஆட்சேபனை எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த அறிக்கை சமர்பித்த பின்னரே, பறவைகள் சரணாலயம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வரும்.இப்பணியை மேற்கொள்ள 'வனத்துறை செட்டில்மென்ட் அலுவலர்' என்ற பணியிடம் இருக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் அத்தகைய பணியிடம் இல்லாததால், கோட்ட கலால் அலுவலர் ராகவிக்கு, வனத்துறை செட்டில்மென்ட் அலுவலர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.பட்டா நிலம், ஆக்கிரமிப்பு உள்ளதா, யாரேனும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனரா என்பது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது முடிந்த பின், வனத்துறை சார்பில் எல்லை உறுதி செய்யப்பட்டு, அடுத்த மேம்பாட்டு பணிகள் துவங்கும்.இயற்கை கழக தலைவர் ரவீந்தரன் கூறுகையில்,''திருப்பூரில் பறவைகள் சரணாலயம் அமையவிருப்பது, பெரும் ஆர்வம், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாக நடைமுறை பணிகளை விரைவாக முடித்து, சரணாலய மேம்பாடு பணிகளை விரைவில் துவங்கும் என, எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X