சிலவரி செய்திகள்: நாமக்கல்..
Added : மார் 25, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

சின்ன வெங்காயத்தில்

நோய் தாக்கத்தால் கவலை எருமப்பட்டி-எருமப்பட்டி பகுதியில், சின்ன வெங்காயத்தில் நோய் தாக்கத்தால் மகசூல் பாதித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.எருமப்பட்டியை சுற்றியுள்ள வரகூர், வடவத்துார், பொட்டிரெட்டிப்பட்டி, பவித்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், மார்கழி மாத பட்டமாக, 200 ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டிருந்தனர். இந்தாண்டு இப்பகுதியில் அதிகளவில் பெய்த கடும் பனிப்பொழிவால், சின்ன வெங்காயத்தில் நோய் தாக்கம் ஏற்பட்டு, மகசூல் குறைந்துள்ளது. இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், 'எருமப்பட்டி பகுதியில், இந்தாண்டு பெய்த கடுமையான பனியின் காரணமாக, சின்ன வெங்காய இலைகளில் நோய் தாக்கம் ஏற்பட்டு வெங்காயம் மண்ணிலேயே சுருங்கியது. இதனால் ஆண்டுதோறும், ஒரு ஏக்கருக்கு, 20 மூட்டை வரும் சின்ன வெங்காயம், இந்தாண்டு, 10 மூட்டைகள் கூட வரவில்லை' என்றனர்.
கிணற்றில் மூழ்கிவாலிபர் உயிரிழப்புஎலச்சிபாளையம்,--வையப்பமலையில், கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.எலச்சிபாளையம் அடுத்த வையப்பமலை, சந்தைப்பேட்டையை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் மணிகண்டன், 30; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வந்தார். இவர், நேற்று காலை, 10:00 மணியளவில், வையப்பமலை ஆவின் பாலகம் அருகே உள்ள ஊர் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மணிகண்டன் நீரில் மூழ்கினார். மக்கள் அளித்த தகவல்படி, ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மணிகண்டனின் சடலத்தை மீட்டனர். மணிகண்டனுக்கு, கலையரசி, 25, என்ற மனைவியும், வர்ஷினி, 4, சனா, 2, என்ற இரு மகள்களும் உள்ளனர். எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாலையை அகலப்படுத்த பூஜைராசிபுரம்,-ராசிபுரம் பகுதியில், 13.50 கோடி ரூபாய் மதிப்பில் சாலையை அகலப்படுத்த பூமி பூஜை நடந்தது. ராசிபுரம் நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலையான ஆண்டகளூர் கேட் முதல் எல்லப்பாளையம் வரையும், ராசிபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் பழைய கோர்ட் வரை என, 13.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது.ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலச்சந்திரன், ராசிபுரம் தி.மு.க., நகர செயலாளர் சங்கர், சேர்மன் கவிதா உள்பட அதிகாரிகள், தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X