சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் மீது வழக்கு | கரூர் செய்திகள்| Case against women involved in road blockade | Dinamalar
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் மீது வழக்கு
Added : மார் 25, 2023 | |
Advertisement
 


குளித்தலை-கடவூர் அருகே, சுக்காம்பட்டி நடுக்களம் கிராமத்தை சேர்ந்த நுாறுநாள் வேலை திட்ட தொழிலாளர்கள், சம்பள பணம் வழங்காததை கண்டித்து, பாலவிடுதி - கடவூர் நெடுஞ்சாலையில் சுக்காம்பட்டி பிரிவு சாலையில், நேற்று முன்தினம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாலவிடுதி போலீசார் எச்சரிக்கை விடுத்தும், அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் 2 மணி நேரம் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்நிலையில் அரசு அனுமதியில்லாமல் சாலை மறியலில் ஈடுபட்ட, சுக்காம்பட்டி நடுக்களம் கிராமத்தை சேர்ந்த பார்வதி, 55, மகாலட்சுமி, 40, முத்துலட்சுமி, 36, சண்முகவள்ளி, பழனியம்மாள், பாலாமணி, பாக்கியலட்சுமி, கண்ணம்மா ஆகிய 8 பேர் மீது பாலவிடுதி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X