காசநோய் விழிப்புணர்வு பேரணி | கரூர் செய்திகள்| Tuberculosis awareness rally | Dinamalar
காசநோய் விழிப்புணர்வு பேரணி
Added : மார் 25, 2023 | |
Advertisement
 

கரூர்,-உலக காசநோய் தினத்தை ஒட்டி, கரூரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பேரணியை, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கொடியைசைத்து தொடங்கி வைத்தார். இதில், பங்கேற்ற கல்லுாரி மாணவ, மாணவியர், வரும், 2025க்குள் காச நோயை முடிவுக்கு கொண்டு வருவது, காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்க பங்களிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி சென்றனர். விழிப்புணர்வு பேரணி, கரூர் அரசு கலைக்கல்லுாரியில் நிறைவடைந்தது. பின், 'காச நோய் இல்லாத கரூர்' என்ற விழிப்புணர்வு பலுான் பறக்கவிடப்பட்டது.நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., லியாகத், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் ரமாமணி, துணை இயக்குனர்கள் சரவணன், சந்தோஷ்குமார், அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X