சிலவரி செய்திகள்: ஈரோடு...
Added : மார் 25, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

மாரியம்மன் கோவிலில்

இன்று கம்பம் நடும் விழாஈரோடு,-பெரிய மாரியம்மன் வகையறா கோவில் குண்டம் திருவிழாவில், கம்பம் நடும் விழா இன்று நடக்கிறது. ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் தேர்த்திருவிழா கடந்த, 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில் பெரிய மாரியம்மன் கோவில், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடும் விழா இன்று இரவு, 9:௦௦ மணிக்கு நடக்கிறது. தேர் திருவீதி உலாவுக்காக, சின்ன மாரியம்மன் கோவிலில் உள்ள தேருக்கு, பெயின்ட் அடித்து, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இலவச அழகு கலைபயிற்சிக்கு அழைப்புஈரோடு,-ஈரோடு, கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம், 2ம் தளத்தில் உள்ள, கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வரும் ஏப்.,5 முதல் மே, 13 வரை நடக்க உள்ளது. சீருடை, உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்ட கிராமப்பகுதியினர், 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டோர், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோம், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கலாம். பயிற்சி நிலையத்தை நேரில் அல்லது 87783 23213, 0424 2400338 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

மின் கணக்கீட்டாளரைதாக்கியதாக புகார்கோபி,-மின் கணக்கீட்டுக்கு சென்ற ஆய்வாளரை, தாக்கிய சம்பவம் குறித்து, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.கவுந்தப்பாடி அருகே செந்தாம்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன், 42, மின் வாரிய கணக்கீட்டு ஆய்வாளர்; கவுந்தப்பாடி புதுாரை சேர்ந்த பழனிச்சாமி, 42, வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை, மின் கணக்கெடுப்பு பணிக்கு சென்றார். அப்போது பழனிச்சாமி தகாத வார்த்தை பேசி, தென்னை மட்டையால் நாகராஜனை தாக்கினாராம். காயமடைந்த அவர், கோபி தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். நாகராஜன் புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

காங்., ஆர்ப்பாட்டம்கோபி,-காங்., எம்.பி., ராகுலுக்கு, அவதுாறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து, கோபி சட்டசபை தொகுதி காங்., கட்சி சார்பில், கோபியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் நல்லசாமி, நகர தலைவர் மாரிமுத்து, வட்டார தலைவர்கள் சண்முகசுந்தரம், ஜவகர்பாபு, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செல்வமுத்து மாரியம்மன்கோவிலில் 29ல் பொங்கல்ஈரோடு,-பெரிய சேமூரை அடுத்த, தென்றல் நகர் செல்வமுத்து மாரியம்மன், விநாயகர், பாலமுருகன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா வரும், 29ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை, பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 28ம் தேதி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. 29ம் தேதி அக்னி கரகம், அலகு குத்துதல், பொங்கல் வைபவம் நடக்கிறது.கொடுமுடி காவிரி கரையில் ஆக்கிரமிப்பு: போலீசில் புகார்கொடுமுடி, மார்ச் 25-காவிரி கரையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, போலீசில் புகார் தரப்பட்டது.கரூர் நீர்வளத்துறை ஆற்று பாதுகாப்பு பிரிவு பாசன ஆய்வாளர், கொடுமுடி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில், பலர் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கடை அமைத்திருந்தனர். சில மாதங்களுக்கு முன் நீர்வளத்துறை ஆற்று பாதுகாப்பு பிரிவினர், வருவாய் துறை அதிகாரிகள் அகற்றினர். மீண்டும் அதே பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். அகற்ற சொன்னால் மறுக்கின்றனர். உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊனமுற்றோர் தின விழாகோபி,-அறம்-நேசம் தன்னார்வ இயக்கத்தின் சார்பில், உலக ஊனமுற்றோர் தினத்தின் பத்தாம் ஆண்டு துவக்க விழா கோபியில் நடந்தது. விழாவில் பயனாளிகளுக்கு, கல்வி உதவித்தொகை, சிறுதொழில் உதவி, ஊன்றுகோல் மற்றும் சர்க்கர நாற்காலி வழங்கினர். உஷாராணி, சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X