ஈரோடு,-''கோடை காலம் துவங்கியதால், மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரான, அரசின் ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை ஆணையர் பிரகாஷ் பேசியதாவது:அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடக்கும் பணிகளை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும். சமத்துவபுர குடியிருப்புகளில் தேவையான மேம்பாட்டு பணி செய்ய வேண்டும்.கோடை காலம் துவங்கிவிட்டதால், அனைத்து பகுதிகளிலும் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துாய்மை பாரத இயக்கம், பாதாள சாக்கடை திட்டப்பணிகளை துரிதப்படுத்தி, சீரமைக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.