போலி பட்டா விவகாரத்தில் துணை தாசில்தார் கைது
Added : மார் 25, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



மதுரை : மதுரையில் போலி பட்டா விவகாரம் தொடர்பாக மதுரை மேற்கு தாலுகா துணை தாசில்தார் மீனாட்சிசுந்தரம் 54, கைது செய்யப்பட்டார்.

மதுரை கலைநகர் அருகே பல்லவி நகரைச்சேர்ந்தவர் கோபிலால். ஆனையூர் பகுதியில் சையது அபுதாஹீர் என்பவரிடம் 1990 ல் காலியிடம் ஒன்றை வாங்கி, அதில் வீடு கட்டினார். ஏற்கனவே இந்த இடம் பேட்டைக்காரன் என்ற ராமன் என்பவர் பெயரில் பட்டா பெறப்பட்டு வேறு நபருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோபிலாலுக்கு சொந்தமான அந்த இடம் ஆ.கோசாகுளம் ராஜா செல்வராஜ் என்பவர் பெயருக்கு பட்டா மாற்றியது தெரியவந்தது.

இதுதொடர்பாக மதுரை நகர் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவில் கோபிலால் 2021ல் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில், கோபிலால் அந்த இடத்தை வாங்கும்முன், அது ராமன் என்பவர் பெயரில் இருந்தது. ராஜா செல்வராஜ் தந்தை பெயர் ராமன் என்ற பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி அந்த இடத்திற்கு அவரது பெயரில் பட்டா பெற்றுள்ளார்.

இதற்கான பட்டா மாறுதலை வி.ஏ.ஓ., தமிழ்ச்செல்வன், கிராம உதவியாளர் பால்பாண்டி ஆய்வு செய்து, அப்போதைய கூளப்பாண்டி துணை தாசில்தார் மீனாட்சி சுந்தரம் பட்டா வழங்கியது தெரியவந்தது. ராஜாசெல்வராஜ், மீனாட்சி சுந்தரம் (தற்போது மேற்கு தாலுகா) மீது நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மீனாட்சிசுந்தரம் இதில் உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமின் பெற்றார்.

இதை எதிர்த்து எதிர்தரப்பினர் மனுதாக்கல் செய்தனர். மார்ச் 8ல் இவரது முன்ஜாமின் ரத் தானதால் தலைமறைவானார். நேற்று காலை அவரை கடச்சனேந்தலில் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு எஸ்.ஐ., கண்ணன் தலைமையில் போலீசார் கைது செய்தனர். அவரை 'சஸ்பெண்ட்' செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X