பஞ்சவடீ ஸ்ரீவாரி வேங்கடாசலபதிக்கு சிறப்பு திருமஞ்சன சேவை துவக்கம்
Added : மார் 25, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Inauguration of special Thirumanjana Seva for Panchavadee Srivari Venkatachalapati   பஞ்சவடீ ஸ்ரீவாரி வேங்கடாசலபதிக்கு சிறப்பு திருமஞ்சன சேவை துவக்கம்



புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமிக்கு வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு திருமஞ்சனம் சேவை துவக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அடுத்த பஞ்சவடீ ஷேத்திரம் மத்திய திருப்பதி என அழைக்கப்படுகிறது. இங்குள்ள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவிலில் ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமிக்கு, திருப்பதியில் நடைபெறுவதை போலவே, வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு திருமஞ்சனம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் துவக்க பஞ்சவடீ கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

இதன் தொடக்கமாக, நேற்று (24ம் தேதி) அதிகாலை 5:௦௦ மணிக்கு, திருமலை திருப்பதி தலைமை பட்டாச்சாரியார் வேணுகோபால் தீக்சிதலு சுப்ரபாத சேவையை துவக்கி வைத்தார்.

சுவாமிக்கு தோமாலை சேவை, அர்ச்சனை போன்ற சேவைகள் வைகாநஸ ஆகமப்படி நடந்தது.

தொடர்ந்து, ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமிக்கு மங்கள திரவியங்களால் விசேஷ திருமஞ்சன சேவை, வேத பாராயணத்துடன் விமர்சையாக நடந்தது.

திருமஞ்சனத்திற்கு பின் விசேஷ வாசனை புஷ்பங்களால் தொடுக்கப்பட்ட மாலைகளால் அலங்காரம் செய்து, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட விசேஷ தளிகை சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்டது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமிக்கு திருமஞ்சனமும், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் விசேஷ சேவைகளையும் செய்ய விரும்பும் பக்தர்கள், பஞ்சமுக ஸ்ரீஐயமாருதி சேவா ட்ரஸ்டை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X