பெண் காவலர் வீட்டில் நகைகள் திருடிய திருப்பூர் வாலிபர் கைது
Added : மார் 25, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Thirupur youth arrested for stealing jewelery from female police house   பெண் காவலர் வீட்டில் நகைகள் திருடிய திருப்பூர் வாலிபர் கைது



கடலுார்,: கடலுார் பெண் காவலர் வீட்டின் கதவை உடைத்து 16 சவரன் நகை திருடிய வழக்கில் திருப்பூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் சரவணன் மனைவி பார்வதி. கோண்டூரில் உள்ள அவரது வீட்டில் கடந்த பிப்., 24ம் தேதி, 16 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் புதுச்சேரியில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார், அங்கு கடந்த 3 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஷேர் ஆட்டோவில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

இதில், திருப்பூர் மாவட்டம், கரைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், 32; என்பதும், பெண் காவலர் வீட்டில் நகைகள் திருடியதும் தெரிந்தது.

அவரை கைது செய்த போலீசார் 5 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X