'பிரீசர் பாக்சில்' மின்சார கசிவு; துக்க வீட்டில் 15 பேர் மயக்கம்
Added : மார் 25, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே, துக்க வீட்டில் உடலை வைத்திருந்த பிரீசர் பாக்சிலிருந்து மின்சாரம் கசிந்ததில், 15 பெண்கள் மயக்கமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டு அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் குமரன் மகள் கயல்விழி, 17; பிளஸ் 2 படித்து வந்தார்.

தேர்வுக்கு படிக்கவில்லை என அவரது தாய் சரளா திட்டியதால், வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது உடல் இறுதி அஞ்சலி செலுத்துவற்காக, பிரீசர் பாக்சில் நேற்று வைக்கப்பட்டிருந்தது. மதியம் 1:15 மணியளவில் இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்த உறவினர்கள், பிரீசர் பாக்ஸ் மீது விழுந்து அழுதனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பிரீசர் பாக்சி லிருந்து மின்சாரம் கசிந்ததில், அதே பகுதியைச் சேர்ந்த எழிலரசன் மனைவி செல்வி, 48; அழகேசன் மனைவி சுந்தரி, 45; ஊராட்சி தலைவர் உதயா மனைவி செல்வி, 40; ஆறுமுகம் மனைவி கோமதி, 42; வீரன் மனைவி பச்சையம்மாள், 47; பூபாலன் மனைவி கீர்த்தி, 18; வெங்கடேசன் மகள் நிஷா, 19; உட்பட 15 பெண்கள் மயங்கி விழுந்தனர். இதனால் அங்கே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் 10 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் செல்வி, சுந்தரி, கீர்த்தி, நிஷா ஆகியோர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் .

மேலும், 3 பேர் விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X