கடலுார்: கடலுார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய, இருவர் போலீசாரிடம் சிக்கினர்.
கடலுார் அடுத்த எஸ்.என். சாவடி கெடிலம் ஆறு சாலையில் உள்ள அரசு சிறார் கூர்நோக்கு இல்லத்தில், பாதுகாப்பு குறைவு காரணமாக, கடந்த 22ம் தேதி நள்ளிரவு ஆறு சிறுவர்கள் மரத்தின் வழியாக தப்பிச் சென்றனர்.
இது குறித்து கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, சிறுவர் களை தேடி வந்தனர்.
சிதம்பரத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் நள்ளிரவில் ஊருக்கு புறப்பட்டு சென்றபோது, ரோந்து சென்ற கடலுார் புதுநகர் போலீசார் மடக்கிப் பிடித்தனர். கிள்ளை சிறுவன் மற்றும் ஆவினங்குடி சிறுவன் இருவரும் கிள்ளையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்த போது சிக்கினர்.
நான்கு பேரையும் கடலுார் புதுநகர் போலீசார் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இருவரை தேடி வந்தனர்.
இதனிடையே தப்பியோடிய திருவண்ணாமலை உள்ள வீட்டிற்கு சென்ற 17 வயது சிறுவன் மற்றும் கூத்தப்பாக்கத்தில் சுற்றித்திரிந்த 14 வயது சிறுவனையும் போலீசார் அழைத்து வந்து, கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். தப்பியோடிய ஆறு சிறுவர்களும் மீட்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.