மின் கம்பி மிதித்த சிறுவன் பலி மயிலத்தில் உறவினர்கள் மறியல்
Added : மார் 26, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
A boy who stepped on an electric wire died, his relatives protested in Mylam   மின் கம்பி மிதித்த சிறுவன் பலி மயிலத்தில் உறவினர்கள் மறியல்

மயிலம்:மயிலம் அருகே வயலில் அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பியை மிதித்த சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், ஆத்திரமடைந்த உறவினர்கள், மின் ஊழியர்களை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வேங்கை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் யுவனேஸ்வரன், 5, ராஜா மகன் நித்திஷ், 4; உட்பட நான்கு சிறுவர்கள் நேற்று காலை, 7:00 மணியளவில் வீட்டின் அருகே உள்ள வயல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பியை யுவனேஸ்வரன், நித்திஷ் மிதித்துள்ளனர். இதில், மின்சாரம் பாய்ந்து யுவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்; நித்திஷ் படுகாயமடைந்தார்.

மயிலம் போலீசார், யுவனேஸ்வரன் உடலை கைப்பற்றி, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த நித்திஷ் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு மின்வாரிய அலுவலர்கள் வரவில்லை. ஆத்திரம் அடைந்த சிறுவனின் உறவினர்கள் ஜக்காம்பேட்டையில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர்.

அப்போது, மின் வாரிய ஊழியர்களுக்கும், சிறுவன் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த உறவினர்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், 8:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.

டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியன் மற்றும் மயிலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி சமாதானம் செய்தனர். தொடர்ந்து காலை, 9:00 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X