திருப்பூர்:பெற்ற மகள் என்றும் பாராமல், 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு, திருப்பூர் மகிளா கோர்ட், வாழ்நாள் முழுதும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர், 59 வயது கூலி தொழிலாளி. இவர், 2019ல், தன், 12 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை, 'யாரிடமும் சொல்லக் கூடாது' என, அடித்து மிரட்டியுள்ளார்.
இது குறித்த புகாரின்படி, உடுமலை மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில் நீதிபதி பாலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார்.
மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு வாழ்நாள் முழுதும் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தார்.