இளைஞரை கடத்தி அடித்துக் கொலை வக்கீல் உட்பட நால்வர் கைது
Added : மார் 26, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Four arrested including lawyer for kidnapping and beating youth   இளைஞரை கடத்தி அடித்துக் கொலை வக்கீல் உட்பட நால்வர் கைது

வடவள்ளி;கோவையில் தொழில் போட்டி மற்றும் முன்பகையால், இளைஞரை கடத்தி கொலை செய்த வக்கீல் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி,26; திருமணமானவர். இவர், பழைய வாகனங்களை விற்பனை செய்யும் ஆட்டோ கன்சல்டிங் அலுவலகம் வைத்திருந்தார். கடந்த, 22ம் தேதி, வீட்டை விட்டு சென்ற சிரஞ்சீவி, வீடு திரும்பவில்லை.

கோவை வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனையில் இருந்து சிரஞ்சீவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவரை மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், வடவள்ளி போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணையில், வடவள்ளியை சேர்ந்த அஸ்வின், 39 என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து சிரஞ்சீவியை தாக்கியது தெரியவந்தது.

அஸ்வினும் பழைய வாகனத்தை விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். சிரஞ்சீவி, அஸ்வினின் வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.

இதனால், கோபமடைந்த அஸ்வின், திருநெல்வேலியை சேர்ந்த நண்பரான வக்கீல் முத்தையா என்பவரை அணுகி, சிரஞ்சீவியை கடத்த திட்டமிட்டுள்ளார்.

கடந்த, 22ம் தேதி, சிரஞ்சீவியை கடத்தி, வடவள்ளியில் உள்ள முத்தையாவின் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, அஸ்வின், முத்தையா, கண்ணன், ஆனந்த்பாபு ஆகியோர், ஒரு நாள் முழுவதும் வைத்து கட்டையால் தாக்கியுள்ளனர்.

கடந்த, 23ம் தேதி, உயிருக்கு ஆபத்தான நிலையில், சிரஞ்சீவியை வடவள்ளி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான தனிப்படை போலீசார், திருநெல்வேலி சென்று நால்வரையும் கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில், சிரஞ்சீவி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

அஸ்வின்

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X