நாகப்பட்டினம்:நாகை மாவட்டம், தேவூர் டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம் விற்பனை உதவியாளர்கள் ரமேஷ்குமார், செல்வம் பணியில் இருந்த போது, கடைக்கு வந்த ராதா மங்களம், புகழேந்திரன், 38, பட்டமங்களம் அஜீத், 40, ஆகியோர் கடனுக்கு மது கேட்டனர்.
விற்பனையாளர்கள் தர மறுத்ததால், கத்தியை காட்டி மிரட்டினர். அப்போது, பார் நடத்தும் பாஸ்கர் இருவரையும் விரட்டியுள்ளார்.
ஆத்திரமடைந்த இருவரும், நேற்று முன்தினம் நள்ளிரவு, பாஸ்கர் வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், பாஸ்கர் வீட்டின் வாசல் கதவு மற்றும் வாசலில் இருந்த பொருட்கள் தீயில் கருகின.
கீழ்வேளூர் போலீசார் புகழேந்திரன், அஜீத் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.