ரயில் மோதி ஒருவர் பலி | சென்னை செய்திகள்| One killed in train collision | Dinamalar
ரயில் மோதி ஒருவர் பலி
Added : மார் 26, 2023 | |
Advertisement
 



திருவொற்றியூர்: இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலியானார்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன், 38. நேற்று மாலை, திருவொற்றியூர், ராஜாஜி நகரில் இரு சக்கர வாகனத்தில், ரயில்வே கேட்டை கடக்க முயன்றார்.

அப்போது, அவ்வழியே வந்த விரைவு ரயில் மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X