திருச்சுழியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டை இடிக்காமல் 20 அடி நகர்த்திய விவசாயி
Added : மார் 26, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
A farmer moved 20 feet without demolishing an occupied house in Thiruchuzhi   திருச்சுழியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டை   இடிக்காமல் 20 அடி நகர்த்திய விவசாயி

திருச்சுழி:விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ரோட்டை ஆக்ரமித்து கட்டியிருந்த வீட்டை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. வீட்டை ரூ.15 லட்சம் செலவில் உரிமையாளர் நகர்த்தியுள்ளார்.

திருச்சுழி அருகே பனையூரை சேர்ந்தவர் லட்சுமணன் 52. மனைவி பஞ்சவர்ணம் முன்னாள் ஊராட்சி தலைவர். இவர் 2003ல் பிள்ளையார் நத்தம் - கமுதி ரோடு அருகே 2 மாடி வீடு கட்டினார்.

12 அடி ரோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பனையூரை சேர்ந்த ராமச்சந்திரன் உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த பொது நல வழக்கில் 2021 அக்.28 ல் ஆக்கிரமிப்பில் கட்டிய வீட்டை இடித்து அகற்ற வேண்டும்

அதற்கு 12 வார அவகாசம் வழங்கப்படுகிறது என தீர்ப்பளிக்கப்பட்டது.

20 நாட்களுக்கு முன் ஊராட்சி நிர்வாகத்தினர் வீட்டை இடிக்க முயன்றனர். லட்சுமணன் வீட்டை இடிக்க மனமில்லாமல் வருவாய் துறை ஊராட்சி நிர்வாகத்திடம் 2 மாத அவகாசம் கேட்டார்.

பின்னர் ராஜஸ்தானை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் மூலம் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வீட்டின் அடித்தளத்தை 25 நாட்களாக தோண்டும் பணி நடந்தது.

அதன் பின் ஜாக்கிகளை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ஒரு அடி வீதம் வீடு நகர்த்தப்பட்டது. தற்போது 20 அடி வரை வீடு நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு 15 லட்சம் வரை லட்சுமணன் செலவு செய்துள்ளார்.

லட்சுமணன் கூறுகையில் பல லட்சம் செலவில் பார்த்து பார்த்து கட்டிய வீடு இது. இடிக்க மனம் இன்றி எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று வீட்டை 20 அடி நகர்த்தியுள்ளேன். தீர்ப்பிற்கு எதிராக அப்பீல் செய்யவும் முடிவு செய்துள்ளேன் என்றார்.---

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X