ஊக்கத்தொகை உதவி திட்டத்தில் 6,310 மாணவியர் பயன்
Added : மார் 26, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

ஈரோடு: திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம், புதுமைப்பெண் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். எம்.பி., கணேசமூர்த்தி, மேயர் நாகரத்தினம் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, 335 பயனாளிகளுக்கு, திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம், புதுமை பெண் திட்டத்தில், 2,169 மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கி பேசியதாவது:
மாவட்டத்தில் முதற்கட்டமாக, 4,141 மாணவியருக்கும், இரண்டாம் கட்டமாக இங்கு, 2,169 மாணவியருக்கும், 43.38 லட்சம் ரூபாய் மதிப்பில் மாதம், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில், 6,310 மாணவியர் பயன் பெறுகின்றனர். இதனால் பள்ளி கல்வியுடன் தடைபடும் மாணவியர், கல்லுாரி படிப்பை தொடர வாய்ப்பாகிறது. வெவ்வேறு திருமண நிதியுதவி திட்டத்தில், 303 பயனாளிகளுக்கு, 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சிறந்த மூன்று பட்டு விவசாயிகளுக்கு முறையே ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தவிர பட்டு விவசாயிகளுக்கு நவீன புழு வளர்ப்பு தளவாடங்கள், பண்ணை உபகரணங்கள் என, ஐந்து பேருக்கு உபகரணங்கள் வழங்கியுள்ளோம்.

சி.என்.கல்லுாரி வளாகத்தில் ஒரு நுாலகம், ஐ.ஏ.எஸ்., அகாடமி அமைத்து, போட்டி தேர்வுகளில் சிறப்பாக செயல்பட விரும்புவோருக்கு பயிற்சி வழங்கப்படும். ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் நிலையில் வெற்றி பெறுவோருக்கு மாதம், 10 ஆயிரம் ரூபாய் வீதம், 10 மாதத்துக்கும், இரண்டாம் நிலையில் வெற்றி பெறுவோருக்கு மாதம், 15 ஆயிரம் ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதுபோன்ற வசதிகளை பெற்றுத்தர முயல்வோம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X