மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு | கரூர் செய்திகள்| Increase in water supply to Mayanur Kathavana | Dinamalar
மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
Added : மார் 26, 2023 | |
Advertisement
 


கரூர்: மாயனுார் கதவணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.
கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 876 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 879 கன அடியாக தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, வினாடிக்கு, 115 கன அடி தண்ணீர் வந்தது.
ஆனால் குடிநீர் தேவைக்காக, அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 40 கன அடி திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 52.23 அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணை
க.பரமத்தி அருகே, ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 3 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 13.94 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
நங்காஞ்சி அணை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 38.81 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் க.பரமத்தியில் மட்டும், 2.6 மி.மீ., மழை பதிவானது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X