டி.டி.ஆர்.ஓ., பணியிடம் 3 மாதமாக காலி: சிரமத்துக்குள்ளாகும் மாற்றுத்திறனாளிகள்
Added : மார் 26, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



எருமப்பட்டி: நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், பரமத்திவேலுார், கொல்லிமலை, குமார
பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட, 8 தாலுகாக்கள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெறவும், மூன்று
சக்கர சைக்கிள், காதோலி கருவி, செயற்கை கால் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் இலவச சலுகைகள், பஸ் பாஸ் உள்ளிட்டவை பெற தினமும், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நடக்க முடியாத நிலையிலும், மாவட்டம் முழுவதிலும் இருந்து, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரில் மனு கொடுக்கவும், கையெழுத்து வாங்கவும், சான்றுகள் பெறவும் வருகின்றனர்.

ஆனால், கலெக்டர் அலுவலகத்திலிருந்த மாற்றுத்திறனாளி நல அலுவலர் திருமுருக தட்சணா மூர்த்தி கடந்த, 3 மாதத்திற்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், இதுவரை அந்த பணிக்கு புதிய மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் நியமிக்காததால், தினமும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டு வந்து, ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதுகுறித்து, மாற்றுத்திறனாளி ஒருவர் கூறுகையில், 'மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி பெற, அதிகாலையிலேயே எழுந்து, எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரத்திலிருந்து, மூன்று பஸ்கள் பிடித்து கலெக்டர் அலுவலகம் வந்தேன். ஆனால், இங்கே உள்ள அதிகாரிகள், மாவட்ட அதிகாரி இல்லை என்றும், மனுவை கொடுத்து விட்டு செல்லுங்கள் என, சொல்லி அனுப்புகின்றனர்' என்றார்.
மாற்றுத்திறனாளி அலுவலக பணியாளர் ஒருவர் கூறுகையில், 'கடந்த டிச., மாதத்திலிருந்து பணியாற்றி வந்த, டி.டி.ஆர்.ஓ., மாறுதலாகி சென்றதால், திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் (பொ) அதிகாரியாக உள்ளார். அவர் வாரத்திற்கு, 2 நாட்கள் மட்டுமே வருகிறார். வந்த உடன் கையெழுத்து போட்டு விட்டு சென்று விடுகிறார்' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X