தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த மணிமாறன் வீட்டில், 'ஏசி' பழுதானது.
நேற்று முன்தினம் இரவு, கும்பகோணத்தில் உள்ள தனியார் ஏஜன்சியில் பணியாற்றும், தாராசுரம் பகுதியைச் சேர்ந்த சேக்லாவுதீன், 24, கணேஷ், 23, ஆகியோர், மணிமாறன் வீட்டுக்கு சென்று, பழுதடைந்த 'ஏசி'யில் உள்ள சிலிண்டரில், காஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக காஸ் சிலிண்டர் வெடித்தது. இதில், சேக்லாவுதீன், கணேஷ் படுகாயமடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, ஆம்புலன்சில் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். வழியில் கணேஷ் இறந்தார்.
படுகாயமடைந்த சேக்லாவுதீன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பெறுகிறார். திருநீலக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.