தந்தை அடித்துக் கொலை மகன், தாயுடன் கைது | பெரம்பலூர் செய்திகள்| Father beats son to death, arrests with mother | Dinamalar
தந்தை அடித்துக் கொலை மகன், தாயுடன் கைது
Added : மார் 27, 2023 | |
Advertisement
 

பெரம்பலுார்:காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, தாயுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலுார், பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணண், 45. இவரது மனைவி மலர்க்கொடி, 40. இவர்களின் மகன் வெங்கடேஷ், 26. சில நாட்களுக்கு முன் இவர் காதல் திருமணம் செய்துள்ளார்.

இதற்கு ராமகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று முன்தினம் இது தொடர்பாக வாக்குவாதம் நடந்த நிலையில், ராமகிருஷ்ணண் வீட்டின் முன் இரவு கட்டிலில் படுத்து துாங்கினார்

அப்போது, வெங்கடேஷ், மலர்க்கொடி சேர்ந்து, அவரை கட்டையால் அடித்துக் கொலை செய்து, உடலை வீட்டின் பின்புறம் வைத்து, இருவரும் தலைமறைவாகினர்.

தகவலறிந்த பெரம்பலுார் போலீசார், தலைமறைவாக இருந்த வெங்கடேஷ், மலர்க்கொடியை கைது செய்தனர். காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, தாயுடன் சேர்ந்து அடித்து கொலை செய்த மகன் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X