சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் தீவிரம்
Added : மார் 27, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

ஈரோடு: ஈரோடு சோலாரில், ரூ.63.50 கோடி செலவில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
ஈரோடு மாநகராட்சி ஒருங்கிணைந்த மத்திய பஸ் ஸ்டாண்டில் வெளியூர், டவுன், மினி பஸ்கள் தனித்தனியாக நிறுத்தப்பட்டு வருகிறது. மாநகர பகுதி விரிவாக்கம், போக்குவரத்து நெரிசல், எதிர்கால வளர்ச்சி உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு, தற்போது ஈரோடு பஸ் ஸ்டாண்ட் தவிர புறநகர் பகுதிகளில் இரு பஸ் ஸ்டாண்ட் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இந்நிலையில், தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் கரூர் சாலையில், ஈரோடு அடுத்துள்ள சோலார் பகுதியிலும், வட மாவட்டங்களை இணைக்கும் வகையில் சத்தி சாலையில் சூளை அடுத்துள்ள கனிராவுத்தர்குளம் பகுதியிலும், இரு பஸ் ஸ்டாண்டுகளை உருவாக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

முதல்கட்டமாக சோலாரில், 24 ஏக்கர் பரப்பளவில், 63 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடந்து வருகிறது. 80 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் அமையவுள்ள பஸ் ஸ்டாண்டில் தரைதளம், 7,746 சதுரமீட்டர் பரப்பிலும், முதல் தளம், 4,260 சதுரமீட்டர் பரப்பிலும், நடைமேடை, 5,378 சதுரமீட்டரிலும் அமைக்கப்பட உள்ளது. சுழற்சி பகுதி, 3,317 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது.
பஸ் ஸ்டாண்டில், 134 கடைகள், 800க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் வகையில் டூ வீலர் ஸ்டாண்ட், ஆட்டோக்கள் நிறுத்துவதற்கான இடவசதி மேற்கொள்ளப்பட உள்ளன. டைம் கீப்பர் அறை, பஸ் பயணச்சீட்டு முன்பதிவு அறை, கழிப்பறைகள், வெளிமாவட்ட பயணிகள் அமர்வதற்காக தனி அறை என, பல்வேறு வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் வளாகம் கட்டப்பட்டு
வருகிறது.
தற்போது வரை கட்டுமான பணிகள், 30 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்தாண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டுவிடும் என. அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் மதுரை, நெல்லை, துாத்துக்குடி, திருச்சி, கரூர், கன்னியாகுமரி பகுதிகளை சேர்ந்த பஸ்கள் இங்கே நிறுத்தப்படும். இதனால் ஈரோடு மாநகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல், பெருமளவு குறையும் என, அதிகாரிகள்
தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X