திருச்சி: புதுச்சேரி மங்களம் தொகுதி பாஜ மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் செந்தில் குமரன். அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர். வில்லியனூர் பகுதியில், நேற்று இரவு 10 மணியளவில் வீட்டுக்கு அருகே பேக்கரி கடை ஒன்றில் நின்று கொண்டிருந்த போது மர்ம கும்பல் திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசி, கத்தியால் தாக்கிக் கொலை செய்து தப்பினர். தப்பிச் சென்றவர்களை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் கொலையில் தொடர்புடைய புதுச்சேரி திருக்காஞ்சி பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம், 43, கொம்பாக்கம் சிவசங்கர், 23, கோர்கார்ட் பகுதியைச் சேர்ந்த ராஜா, 23, புதுச்சேரி தனத்து மேடு வெங்கடேஷ் ,25 , கடலூர் கிளிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்த பிரதாப்,24, கோர்கார்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்,23, அரியாங்குப்பத்தைச் சேர்ந்த விக்னேஷ்,26, ஆகிய 7 பேர் இன்று ஜே.எம்.எண் 3. நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி முன், சரணடைந்தனர். ஏழு பேரையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 7 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பின், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பபட்டனர்.