அதிக அளவில் பாரம் ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களால் ஆபத்து
Added : மார் 27, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 


கரூர்: கரூர் மாநகர பகுதிகளில், சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பாரம் ஏற்றி செல்லும், சரக்கு வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கரூர் நகர பகுதியில் தொழில் நிறுவனங்கள், டெக்ஸ்டைல்கள் அதிக அளவில் உள்ளன. இவற்றுக்கு தேவையான மூலப் பொருட்கள் மற்றும் மரம், கண்ணாடி, இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பாரங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட, கூடுதல் பாரம் ஏற்றிக் கொண்டு செல்கின்றன.

கம்பிகள், மரக்குச்சிகளை போன்ற பொருட்களை ஏற்றி செல்லும்போது வாகனங்களை விட, வெளியில் நீட்டிக் கொண்டு, முன்னாள் மற்றும் பின்னால் செல்லும் இதர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் எடுத்துச் செல்கின்றனர்.
பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களை ஏற்றி செல்லும்
போது, சிவப்பு கொடி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செல்ல வேண்டும். ஆனால், கரூரில், சரக்கு வாகனங்களை இயக்குவோர் இந்த விதிகளை பின்பற்றுவதே இல்லை. இதனால், இத்தகைய வாகனங்களுக்கு பின்னால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, கரூர் போக்குவரத்து போலீசார், அதிக அளவில் சரக்குகளை ஏற்றி செல்வோர் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக சரக்கு வாகனங்களை இயக்குவோரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X