தகராறில் பெண் கொலை இருவரிடம் தீவிர விசாரணை
Added : மார் 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



கண்ணகிநகர்,
பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த இரண்டு பேரை, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரப்பாக்கம், கந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா, 40. நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டிற்கு இவரது மகன் மணி, 15, திரும்பிய போது முகம், தலையில் பலத்த காயத்துடன், மல்லிகா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கண்ணகி நகர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

போலீசார் கூறியதாவது:

மல்லிகாவின் முதல் கணவர் முருகன் இறந்து, 18 ஆண்டு ஆகிறது. பின், மற்றொரு முருகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.

இவர்களது மகன் மணி. இந்நிலையில், கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார், 35, பாண்டியன், 42, என்பவருடன், மல்லிகாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. மல்லிகாவுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.

நேற்று முன்தினம் இரவு, மல்லிகா, ஜெயக்குமார், பாண்டியன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, பணம் கொடுக்கல் வாங்கலில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மல்லிகாவை கொலை செய்திருக்கலாம். சந்தேகத்தின் பேரில் ஜெயக்குமார், பாண்டியனை பிடித்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X