தகராறில் பெண் கொலை இருவரிடம் தீவிர விசாரணை | சென்னை செய்திகள்| Intensive investigation of two accused of murdering a woman in a dispute | Dinamalar
தகராறில் பெண் கொலை இருவரிடம் தீவிர விசாரணை
Added : மார் 28, 2023 | |
Advertisement
 



கண்ணகிநகர்,
பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த இரண்டு பேரை, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரப்பாக்கம், கந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா, 40. நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டிற்கு இவரது மகன் மணி, 15, திரும்பிய போது முகம், தலையில் பலத்த காயத்துடன், மல்லிகா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கண்ணகி நகர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

போலீசார் கூறியதாவது:

மல்லிகாவின் முதல் கணவர் முருகன் இறந்து, 18 ஆண்டு ஆகிறது. பின், மற்றொரு முருகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.

இவர்களது மகன் மணி. இந்நிலையில், கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார், 35, பாண்டியன், 42, என்பவருடன், மல்லிகாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. மல்லிகாவுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.

நேற்று முன்தினம் இரவு, மல்லிகா, ஜெயக்குமார், பாண்டியன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, பணம் கொடுக்கல் வாங்கலில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மல்லிகாவை கொலை செய்திருக்கலாம். சந்தேகத்தின் பேரில் ஜெயக்குமார், பாண்டியனை பிடித்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X