ஊராட்சி துணைத் தலைவி மகன் கொலை வழக்கு: சிறுவன் உட்பட 4 பேர் கைது
Added : மார் 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Panchayat Deputy Chairmans son murder case: 4 people including boy arrested   ஊராட்சி துணைத் தலைவி மகன் கொலை வழக்கு: சிறுவன் உட்பட 4 பேர் கைது



கள்ளக்குறிச்சி : கூத்தக்குடியில் ஊராட்சி துணைத் தலைவியின் மகன் கொலை வழக்கில் சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் ஜெகன்ஸ்ரீ,19; மாணவர். இவரது தாய் செந்தமிழ்ச்செல்வி ஊராட்சி துணைத் தலைவியாக உள்ளார். கடந்த 24ம் தேதி ஜெகன்ஸ்ரீ திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக, வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து, ஜெகன்ஸ்ரீயை தேடினர். இந்நிலையில், கூத்தக்குடி வனப்பகுதியில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கடந்த 25ம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ரமேஷ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தாசில்தார் சத்தியநாராயணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஜெகன்ஸ்ரீயின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

போலீசாரின் விசாரணையில் கூத்தக்குடியை சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன்,31; ரவிச்சந்திரன் மகன் அபிலரசன்,27; மணிகண்டன் மகன் ஆகாஷ்,20; மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் ஜெகன்ஸ்ரீயை கொலை செய்து வனப்பகுதியில் புதைத்தது தெரிந்தது.

விசாரணையில், கார்த்திகை தீபத்தன்று அய்யப்பன், ஜெகன்ஸ்ரீ ஆகியோருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதை மறைத்து அய்யப்பன் நண்பராக ஜெகன்ஸ்ரீயிடம் பேசி பழகியுள்ளார்.

கடந்த 24ம் தேதி மாலை அய்யப்பன், அபிலரசன், ஆகாஷ், 17 வயது சிறுவன் மற்றும் ஜெகன்ஸ்ரீ ஆகியோர் கூத்தக்குடி வனப்பகுதியில் ஒன்றாக மது அருந்தினர். அப்போது, முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்கள் மதுபாட்டில் மற்றும் கத்தில் குத்தி கொலை செய்தனர்.

பின்னர் அங்கிருந்த மரத்திற்கு அடியில் பள்ளம் தோண்டி புதைத்து விட்டனர்.

இதனையடுத்து அய்யப்பன், அபிலரசன், ஆகாஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை கடலுார் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X