சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் 3 பேர் சரண்
Added : மார் 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Chennai lawyer murder case: 3 people surrendered in Villupuram court   சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கு:  விழுப்புரம் கோர்ட்டில் 3 பேர் சரண்



விழுப்புரம் : சென்னையில் வழக்கறிஞர் கொலை வழக்கில் 3 பேர், விழுப்புரம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். வழக்கறிஞர்கள் அவர்களைத் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

சென்னை, பெருங்குடி ராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ், 33; சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார்.

இவர், கடந்த 25ம் தேதி, வீட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் ஜெய்கணேஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

துரைப்பாக்கம் போலீசார், வழக்குப் பதிந்து 2 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், கொலை வழக்கில், சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் கண்ணன் மகன் முருகன், 26; அதே பகுதி தெற்கு மாட வீதியைச் சேர்ந்த வேலுமகன் பிரவீன், 23; சென்னை, மண்ணுார்பேட்டை பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த சின்னராசு மகன் ஸ்ரீதர், 27; ஆகியோர், நேற்று மதியம் 12:00 மணியளவில் விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர்.

அப்போது, அங்கு வந்த விழுப்புரம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சரணடைந்த 3 பேரையும் தாக்க முயன்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

அப்போது, வழக்கில் தொடர்புடைய 3 பேரின் சரண்டர் மனுவுக்காக, யாரும் ஆஜராகக் கூடாது என கூறிய வழக்கறிஞர்கள், சரண்டர் மனுவையும் ஏற்க கூடாது என நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி ராதிகா, சரணடைந்த 3 பேரையும் ஏப்ரல் 5ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பிறகும் கோர்ட் வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர்.

விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார், சரணடைந்த 3 பேரையும் மதியம் 2:00 மணியளவில் பாதுகாப்பாக விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு சிறைக்கு அழைத்து சென்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X