பள்ளி வேன் மோதி சிறுவன் பலி | கடலூர் செய்திகள்| Boy killed in school van collision | Dinamalar
பள்ளி வேன் மோதி சிறுவன் பலி
Added : மார் 28, 2023 | |
Advertisement
 
Boy killed in school van collision   பள்ளி வேன் மோதி  சிறுவன் பலி



கடலுார் : கடலுார் அருகே, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், பள்ளி வேன் மோதியதில் பரிதாபமாக இறந்தான்.

கடலுார் அடுத்த மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் சீனுவாசன், 39; கடலுார் நெடுஞ்சாலைத் துறையில் உதவி இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தீபா. இவர்களது மூன்று வயது குழந்தை தேஜேஸ்வரன். கிழக்கு ராமாபுரத்தில் இருக்கும் சீனுவாசனின் மாமனார் சக்திவேல் வீட்டில் தேஜேஸ்வரன் இருந்தான்.

இந்நிலையில், நேற்று காலை, சக்திவேல் வீட்டின் முன் உட்கார்ந்திந்தார். சிறுவன் தேஜேஸ்வரன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியின் வேன் சிறுவன் மீது மோதியது.

இதில் சிறுவன் துடிதுடித்து இறந்தான். தாத்தா கண் எதிரே பேரன் வேன் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X