மயிலம் : விழுப்புரம் மாவட்டம்மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
அதனையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 6:15 முதல்7:15 மணிக்குள் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் மயிலம் ஆதீனம் கொடியேற்றினார்.
பின், சுவாமிக்கு மஹா தீபாராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தினமும் சுவாமி கிரிவல காட்சி நடக்கிறது.