அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே, குடிபோதையில் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த ஈயகுணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 65; விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் சுப்ரமணி, 40; வேலைக்குச் செல்லாமல் குடி போதைக்கு அடிமையாகியிருந்தார்.
தினமும் குடித்து விட்டு வரும் சுப்ரமணி, தந்தை பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்வது வழக்கம்.
நேற்று காலை 8:00 மணியளவில் சுப்ரமணி, குடிபோதையில் தந்தையிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.
இருவருக்குமிடையே தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சுப்ரமணி, வீட்டிலிருந்த கத்தியால், பாலகிருஷ்ணனின் வயிறு மற்றும் மார்பில் சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து சுப்ரமணியை கைது செய்தனர்.