கத்தியால் குத்தி தந்தை கொலை: 'பாசக்கார' மகன் கைது | விழுப்புரம் செய்திகள்| Father stabbed to death: Pasakara son arrested | Dinamalar
கத்தியால் குத்தி தந்தை கொலை: 'பாசக்கார' மகன் கைது
Added : மார் 28, 2023 | |
Advertisement
 
Father stabbed to death: Pasakara son arrested   கத்தியால் குத்தி தந்தை கொலை: 'பாசக்கார' மகன் கைது



அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே, குடிபோதையில் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த ஈயகுணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 65; விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் சுப்ரமணி, 40; வேலைக்குச் செல்லாமல் குடி போதைக்கு அடிமையாகியிருந்தார்.

தினமும் குடித்து விட்டு வரும் சுப்ரமணி, தந்தை பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்வது வழக்கம்.

நேற்று காலை 8:00 மணியளவில் சுப்ரமணி, குடிபோதையில் தந்தையிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.

இருவருக்குமிடையே தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சுப்ரமணி, வீட்டிலிருந்த கத்தியால், பாலகிருஷ்ணனின் வயிறு மற்றும் மார்பில் சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து சுப்ரமணியை கைது செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X