----குடிநீர், சுகாதாரம், ரோடு எதுவும் இல்லை பரிதவிப்பில் அம்பாத்துறை மேலக்கோட்டை மக்கள்
Added : மார் 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
---- There is no potable water, sanitation, road, Ambatura Melakottai people in Paritawip   ----குடிநீர், சுகாதாரம், ரோடு எதுவும் இல்லை  பரிதவிப்பில்  அம்பாத்துறை மேலக்கோட்டை மக்கள்



சின்னாளபட்டி--அம்பாத்துறை மேலக்கோட்டை பகுதி மக்கள் குடிநீர், ரோடு, சுகாதார வசதிகளுக்காக தவிக்கும் அவலம் பல மாதங்களாக நீடிக்கிறது.

அம்பாத்துறை சின்னாளபட்டி வழித்தட மேலக்கோட்டை பகுதியில் நெசவாளர் காலனி, ம.பொ.சி., காலனி, வாணியர் தெரு, வண்ணார் தெரு பகுதிகளில் 200-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

தினமும் இப்பகுதி வழியாக 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் செல்கின்றனர். இருப்பினும் போதிய தார் ரோடு வசதி இல்லை.

பல தெருக்களில் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. குப்பை கழிவுகள் சரிவர அள்ளப்படாமல் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. குடிநீர் வினியோக குளறுபடியால் தண்ணீருக்காக மக்கள் தவிக்கின்றனர்.

தெருக்களில் புதர் செடிகள் மண்டியுள்ளன. கொசுத்தொல்லை அதிகரிப்பால் தொற்று பரவல் அபாயம் நீடிக்கிறது. இப்பகுதியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



குளம்போல் கழிவு நீர்




ஏ.துரைப்பாண்டியன், ஜமீன்தார், அம்பாத்துறை : சில தெருக்களில் மட்டுமே சிமென்ட் ரோடு உள்ளது. இதுவும் பல இடங்களில் பெயர்ந்து உள்ளது. சமதளமாக இல்லாததால் மழை நீர் குளம் போல் தேங்குகிறது. சாக்கடை வசதி இல்லை. ம.பொ.சி., காலனியில் அசுத்த நீர் குளம் போல் தேங்கியுள்ளது. சின்னாளபட்டி ரோட்டின் இருபுறமும் புதர் அடர்ந்துள்ளன.



போதை நபர்கள் தொல்லை




ஏ.எம்.இளங்கோவன், பொறியாளர், மேலக்கோட்டை : பள்ளி மாணவர்கள், முதியோர், பெண்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் உள்ளிட்டோர், இவ்வழியை நம்பி உள்ளனர். போதிய தெருவிளக்கு வசதி இல்லை. கரியன்குளம் கரைப்பகுதியில் டாஸ்மாக் அமைந்துள்ளதால் போதை ஆசாமிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. பல இடங்களில் ரோடு சேதமடைந்து உள்ளது.



--குடிநீர் தட்டுப்பாடு




அமுதா, குடும்பத்தலைவி, மேலக்கோட்டை: ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்துவதில் அலட்சியம் நீடிக்கிறது. போதிய குடிநீர் கிடைப்பது இல்லை. 15 நாட்கள் இடைவெளியில் வினியோகிக்கின்றனர். தாமதமாகும் சூழலில் புழு உற்பத்தியான தண்ணீரையும் காய்ச்சி குடிக்கும் அவல நிலை உள்ளது. கிராம சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டும் இப் பிரச்னையை ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.



துரிதப்படுத்த நடவடிக்கை




சேகர் தலைவர், அம்பாத்துறை ஊராட்சி : ம.போ.சி., காலனியில் இருந்து தனி வழித்தடம் மூலம் கழிவு நீரை வெளியேற்ற அனுமதி பெறப்பட்டுள்ளது.

அசுத்தநீர் தேங்காத வகையில் கழிவுகளில் இருந்து தண்ணீரை பிரித்து எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. குப்பை கழிவுகளை, திடக்கழிவு மேலாண்மை மூலம் அகற்றும் செயல்முறை கண்காணிக்கப்படும். குடிநீர் வழங்கலுக்கான பணிகள் துரிதப்படுத்தப்படும், என்றார்.






 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X