அரசு கட்டட பணியில் மேல்தளம் இடிந்து தொழிலாளி பலி
Added : மார் 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Worker dies after top floor collapses at government building   அரசு கட்டட பணியில் மேல்தளம் இடிந்து தொழிலாளி பலி



தேனி : தேனியில் கட்டப்பட்டு வந்த அரசு கட்டடத்தின் மேல்தளம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி மாரிமுத்து 37, பலியானார். மற்றொரு தொழிலாளி பலத்த காயமடைந்தார்.

தேனி கே.ஆர்.ஆர். நகரில் மாவட்ட வனத்துறை அலுவலகம் அருகில் ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பக மேகமலை கோட்ட துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. அதன் அருகில் ரூ.40 லட்சம் செலவில் சுற்றுச்சூழல் சுற்றுலா தகவல் மைய கட்ட பணியை தேனி கான்டிராக்டர் பிரபு செய்து வந்தார். கட்டடத்தின் வெளிப்புரத்தில் படிகள், சாய்தளம், பூச்சு வேலைகள் நடக்கிறது.

நேற்று வெளிபுறத்தில் பூச்சு வேலையில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மதியம் 1:15 மணிக்கு கட்டடத்தின் முன் பகுதியின் மேல்தள கான்கீரிட் திடீரென இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் பெரியகுளம் பங்காளபட்டி தொழிலாளி மாரிமுத்து 37, பெரியகுளம் அசோக் 24, சிக்கினர்.

தகவலறிந்து தேனி தீயணைப்பு வீரர்கள் இருவரையும் மீட்டனர். மாரிமுத்துவை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

இது குறித்து ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பக மேகமலை கோட்ட துணை இயக்குனர் ஆனந்த் கூறுகையில், 'கட்டடம் இடிந்து ஒருவர் பலியானது குறித்து விசாரணை நடத்தப்படும்,' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X