நாகை விவசாயிகள் அமைச்சரிடம் மனு
Added : மார் 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



நாகப்பட்டினம், :'நாகையில் சி.பி.சி.எல்., நிறுவன விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு உரிய விலை வழங்க வேண்டும்' என, நாகை விவசாயிகள் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரிடம் மனு அளித்தனர்.

நாகை மாவட்டம், பனங்குடி விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் சங்கத்தினர், மத்திய பெட்ரோலிய மற்றும் எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

நாகை மாவட்டம், பனங்குடியில் 1992ல் எம்.ஆர்.எல்., சுத்தகரிப்பு நிறுவனத்திற்காக, 600 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில், 200 ஏக்கரில் சுத்தகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. பின்னர் சி.பி.சி.எல்., என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கடந்த 2020ல் ஆலை விரிவாக்கத்திற்காக, 658 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தொழிற்சாலைக்கு நிலம் அளிப்போர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என, 1992ல் அறிவிக்கப்பட்டது.

இதுவரை யாருக்கும் வேலை அளிக்கப்படவில்லை. தற்போது கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களுக்கு உரிய சந்தை விலை வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு சி.பி.சி.எல்., நிறுவனத்தில் தகுதிக்கேற்ப வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X