மதுரை மெட்ரோ ரயிலுக்கு திட்ட அறிக்கை தயாரிப்பு நிறுவனம் தேர்வு!
Updated : மார் 28, 2023 | Added : மார் 28, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.1.35 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிக்காக ஆர்வி அசோசியேஷன் என்ற தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூனில் அறிக்கை தயாரித்து மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் (சி.எம்.ஆர்.எல்.,) தெரிவித்துள்ளனர்.



latest tamil news



மதுரையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் ரூ.8500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வேளாண் கல்லுாரி வரையுள்ள 31 கிலோ மீட்டர் துாரம் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியதன் அடிப்படையில் நான்கு நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இதில் ஆர்வி அசோசியேஷன் என்ற நிறுவனம் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.



20 ஸ்டேஷன்கள் பரிந்துரை




இந்நிறுவனம் அளிக்கும் பரிந்துரைப்படி நிலம் கையகப்படுத்தப்படும் பகுதிகள், போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப டிராக்குகளை உயரத்தில் அமைப்பதா, சுரங்கபாதையில் அமைப்பதா என மத்திய அரசு இறுதி செய்யும். திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 20 ஸ்டேஷன்களுக்கு பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது.






இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்நிறுவனம் அளிக்கும் விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதன்படி திருமங்கலம், கப்பலுார் டோல்கேட், தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்த நகர், மதுரைக் கல்லுாரி, மதுரை ரயில்வே ஸ்டேஷன், சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் ஆபீஸ், கோ.புதுார், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ஒத்தக்கடை ஆகிய 20 ஸ்டேஷன்களுக்கு வாய்ப்புள்ளது.

இதில் ஒத்தக்கடை முதல் கோரிப்பாளையம் வரை, வசந்த நகர் முதல் திருமங்கலம் வரை மேம்பால பாதையாகவும் (எலிவேட்டட் டிராக்), வசந்த நகர் முதல் கோரிப்பாளையம் வரை சுரங்க பாதையாகவும் அமையவுள்ளது.

மேம்பால தண்டவாள பாதை பணிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 350 கோடியும், சுரங்க பாதை பணிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 800 கோடியும் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மூன்று பெட்டிகளுடன் இயங்கும் ரயிலின் வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை இருக்கும் வகையில் தண்டவாளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
28-மார்-202323:36:40 IST Report Abuse
Easwar Kamal மெட்ரோ ரயில் வந்தால் தான் ஒரு நகரம் அழகு பெரும். வணிகம் மற்றும் உள்கட்டமைப்பும் உயரும்
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
28-மார்-202318:09:07 IST Report Abuse
venugopal s மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை எதிர்ப்பவர்களின் கருத்து மத்திய பாஜக அரசு முப்பதாயிரம் கோடி ரூபாய் செலவில் மும்பை அஹமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கும் பொருந்துமே!
Rate this:
Cancel
RAJ -  ( Posted via: Dinamalar Android App )
28-மார்-202314:31:13 IST Report Abuse
RAJ மெட்ரோ மெட்ரோ என்று பல்லாயிரக்கணக்கான கோடிகளை கொட்டுகிறார்கள். சாலைகளில் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்து மாடுகளும் நாய்களும் நடுத்தெருவில் இழுத்துப் போடுகின்றன நடப்பதற்கு இடம் கிடையாது ஒரே துர்நாற்றம் . இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு காணாமல் மெட்ரோவில் கோடிகளை கொட்டுவதில் என்ன ஜம்பம். டெண்டர் விடுபவர்களுக்கும் டெண்டர் எடுப்பவர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் கமிஷன்கள் கிடைப்பது மட்டுமே சந்தோஷம் மற்றபடி சுகாதார சீர்கேடுகளை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. மழை பெய்தால் சாலைகளில் தண்ணீர் தேங்கின்றன வடிகால் சரியில்லை. புதியதாக போட்ட சாலைகளை மறுபடியும் தோண்டுகிறார்கள் குறுக்கே வெட்டுகிறார்கள் வேலை முடிந்த பின் அதை சரியாக சரி செய்யாமல் தாறுமாறாக மேடு பள்ளமாக அப்படியே விட்டு விடுகிறார்கள். மோசமான நிர்வாகம் வேலையை சுத்தமாக செய்வதில்லை ஏனோதானோ என்று போய் விடுகின்றனர். மெட்ரோ வா மெட்ரோ சென்னையில் பல இடங்களில் தடுப்புகளை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டு பல்லாயிரம் கோடி கணக்கில் மெட்ரோ என்று ஸ்வாகா செய்கிறார்கள். thonapatta குழிகளில் சைக்கிள் ஓட்டுபவர்களும் ஸ்கூட்டர் காரர்களும் சறுக்கி விழுந்து அடிபடுகின்றனர். மெட்ரோ வேலைக்காக வைக்கப்பட்டுள்ள ராட்சச இரும்பு தடுப்புகள் காரணமாக மழை தண்ணீர் போக இடமில்லாமல் தேங்கி நின்று போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றன. மேலும் எங்கும் தண்ணீரில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி இலவசமாக டெங்குவை கொடுக்கிறது. டாக்டர்களுக்கு நல்ல வருமானம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X