தேனி மாவட்ட போலீஸ் செய்திகள்....
Added : மார் 28, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

விரக்தியில் தற்கொலை

சின்னமனுார்: எரசக்கநாயக்கனுார் ஊராட்சி அலுவலக வடக்கு தெரு கருப்பய்யா 53. இவர் 10 ஆண்டுகளாக வயிற்றுவலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வந்தார். சம்பவ நாளில் கழிப்பறையில் தனக்குத்தானே துண்டை வைத்து கழுத்தில் இருக்கி மயக்க நிலையில் கிடந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் உறவினர், சின்னமனுார் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டது. பின் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலிபர் உயிரிழப்பு

தேனி: தேவாரம் திடீர்புரம் காளியம்மன் கோயில் தெரு கனிஷ் 21. வலிப்பு நோய் பாதிப்பால் தேவாரம், தேனி மருத்துவமனைகளில் மாத்திரை சாப்பிட்டு வந்தார். 10 நாட்களாக மாத்திரை சாப்பிட வில்லை. இதனால் திடீரென பாதிப்பு ஏற்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். தேவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தடை லாட்டரி விற்றவர் கைது

தேனி: உத்தமபாளையம் யாதவர் தெரு பழனிவேல்ராஜன் 53. இவர் மார்ச் 26ல் அங்குள்ள பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் முன் ரூ.3870 மதிப்புள்ள 6 வகையான 105 லாட்டரிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தார். உத்தமபாளையம் சிறப்பு எஸ்.ஐ., நாட்ராயன், லாட்டரிகளை பறிமுதல் செய்து, பழனிவேல்ராஜனை கைது செய்தார்.

மதுபாட்டில் பதுக்கியவர் கைது

தேனி: மூலக்கடை பிள்ளையார் கோயில் தெரு செல்லையா 50. இவர் அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே அரசு அனுமதி இன்றி 20 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கினார். கடமலைக்குண்டு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

சூறாவளியால் பெண் காயம்

கூடலுார்: லோயர்கேம்பில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. கடைவீதி தெருவில் ஆரோன் என்பவரின் வீட்டின் சிமெண்ட் கூரை உடைந்து விழுந்ததில் வீட்டிலிருந்த இவரது உறவினர் பெண் ஜெபா 36, காயம் அடைந்தார். மேலும் இவரது வீட்டில் இருந்த தளவாடப் பொருட்கள் சேதமடைந்தன. லோயர்கேம்ப் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X