ஆத்துப்பாளையம் அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து | கரூர் செய்திகள்| Water flow back to Athuppalayam dam | Dinamalar
ஆத்துப்பாளையம் அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து
Added : மார் 28, 2023 | |
Advertisement
 


கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே ஆத்துப்பாளையம் அணைக்கு கடந்த, 24ம் தேதி வினாடிக்கு, 17 கன அடி தண்ணீர் வந்தது. பிறகு, தண்ணீர் வரத்து நின்ற நிலையில், நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 3 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 13.94 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மாயனுார் கதவணை காவிரி ஆற்றில், மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 876 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 879 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்

பட்டுள்ளது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 214 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால் குடிநீர் தேவைக்காக, அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 25 கன அடி திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 52.63 அடியாக
இருந்தது.
நங்காஞ்சி அணை
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது, 38.81 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரையிலான கடந்த, 24 மணி நேரத்தில் மழை இல்லை.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X