நாமக்கல்: வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு, முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
பங்குனி மாத வளர்பிறை சஷ்டியான நேற்று, நாமக்கல்-மோகனுார் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், காலை, 10:00 மணிக்கு, பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமி, ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
* இதேபோல், மோகனுார் காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், காலை, 11:00 மணிக்கு, பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
* - இதேபோல், ப.வேலுார் சுல்தான்பேட்டையில் உள்ள பகவதி அம்மன் கோவிலில், பால முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.
பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வநாதர் கோவிலில் சுப்ரமணியர், கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், பொத்தனுார் பச்சைமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் சுப்பிரமணியர், பாலப்பட்டி கதிர்மலை முருகன், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், பிராந்தகத்தில் எழுந்தருளியுள்ள, 34 அடி உயரம் கொண்ட ஆறுமுக கடவுள் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.