எல்லா சான்றிதழும் இங்கே கிடைக்கும் 'அலுவலகம்' நடத்திய 5 பேர் கைது வீட்டில் போலி 'அலுவலகம்' நடத்திய 5 பேர் கைது
Added : மார் 29, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
All certificates available here 5 people arrested for running office 5 people arrested for running fake office at home   எல்லா சான்றிதழும் இங்கே கிடைக்கும் 'அலுவலகம்' நடத்திய 5 பேர் கைது வீட்டில் போலி 'அலுவலகம்' நடத்திய 5 பேர் கைது

துாத்துக்குடி:துாத்துக்குடியில், கிராம நிர்வாக அதிகாரி முதல், தாசில்தார் சான்று வரை; பிறப்பு, இறப்பு சான்றிதழ்; போலீஸ் ஸ்டேஷன் ரசீது என எந்த சான்றிதழையும் போலியாக தயார் செய்து வழங்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

துாத்துக்குடி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் வந்தியத்தேவன், 64. இவரது உறவினருக்கு சொந்தமான நிலத்திற்கான கிரைய ஆவணம் தொலைந்து விட்டது.

போலீசில் புகார் செய்து, புதிய ஆவணம் பெறுவதற்காக அதே பகுதியை சேர்ந்த மகாராஜன் என்பவரை அணுகினார்.

அவர், துாத்துக்குடி சுப்பையா முதலியார்புரத்தில் வசிக்கும் பெருமாள், 54, என்பவரது வீட்டிற்கு வந்தியத்தேவனை அழைத்துச் சென்றார்.

போலீஸ் ஸ்டேஷனில் வழங்கப்படும், புகார் பெற்று தரும் ரசீதை பெருமாள் வழங்கினார். பெருமாள் வீட்டில், அவரது நண்பர்கள் ஐந்து பேர் இருந்தனர்.

அவர்கள், கிராம நிர்வாக அலுவலர், வீட்டு வரி ரசீது, நத்தம் பட்டாக்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், அடங்கல் கணக்கு, தாசில்தார் சான்றிதழ் என, போன்றவற்றை போலியாக தயார் செய்து, போலியான ரப்பர் ஸ்டாம்புகளால் முத்திரை வைத்து சான்றிதழ்கள் தருவது தெரிந்தது, வந்தியத்தேவன் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து, துாத்துக்குடி தென்பாகம் போலீசில், அவர் புகார் செய்தார். பல்வேறு சான்றிதழ்களை கம்ப்யூட்டரில் தயார் செய்து, போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையிட்டு, பலருக்கும் வழங்கிய, 50 - 66 வயது வரையிலான ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து, 80க்கும் மேற்பட்ட போலி ரப்பர் ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மகாராஜன், பெருமாள் மற்றும் கம்ப்யூட்டரில் சான்றிதழ் தயாரித்து தந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X