என்ன சான்றிதழ் வேணும்...எல்லாமே இங்கே கிடைக்கும்... வீட்டில் 'அலுவலகம்' நடத்திய 5 பேர் கைது
Added : மார் 29, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
What certificate do you need...everything is available here... 5 people who ran office at home were arrested   என்ன சான்றிதழ் வேணும்...எல்லாமே இங்கே கிடைக்கும்... வீட்டில் 'அலுவலகம்' நடத்திய 5 பேர் கைது

துாத்துக்குடி:துாத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி முதல் தாசில்தார் வரை பிறப்பு இறப்பு சான்றிதழ் முதல் போலீஸ் ஸ்டேஷன் ரசீது வரை அனைத்தையும் போலியாக தயார் செய்து வழங்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் வந்தியத்தேவன் 64. இவரது உறவினருக்கு சொந்தமான நிலத்திற்கான கிரைய ஆவணம் தொலைந்துவிட்டது. போலீசில் புகார் செய்து புதிய ஆவணம் பெறுவதற்காக அதே பகுதியை சேர்ந்த மகாராஜன் என்பவரை அணுகினார்.

மகாராஜன் தூத்துக்குடி சுப்பையா முதலியார் புரத்தில் வசிக்கும் பெருமாள் 54, என்பவரதுவீட்டிற்கு அழைத்துச் சென்றார். போலீஸ் ஸ்டேஷனில் புகார் பெற்றுக் கொண்டு தருவது போல மனுரசீது வழங்கினர். பின்னர் ஆவணம் தொலைந்ததற்கான சான்றிதழ் வழங்குவதற்கு காத்திருக்க செய்தனர். இதற்காக 30 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டனர். போலீஸ் ஸ்டேஷன் சான்றிதழ் பெறுவதற்கு பெருமாள் வீட்டுக்கு சென்றிருந்த போது அங்கு அவரது நண்பர்கள் 5 பேர் இருந்தனர்.

அங்கு கிராம நிர்வாக அலுவலர், வீட்டு வரி ரசீது, நத்தம் பட்டாக்கள், மருத்துவமனை வழங்கப்படும் பிறப்பு இறப்பு சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ் கிராம கணக்குகள், அடங்கல் கணக்கு, தாசில்தார் சான்றிதழ் என அனைத்தையும் அவர்களே போலியாக கம்ப்யூட்டரில் தயார் செய்து, போலியான ரப்பர் ஸ்டாம்புகள் மூலம் முத்திரை வைத்து தருவது தெரியவந்தது.

இதுகுறித்து வந்தியத்தேவன் தூத்துக்குடி தென் பாகம் போலீசில் புகார் செய்தார். எஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் விசாரித்தார்.

பல்வேறு சான்றிதழ்களை கம்ப்யூட்டரில் தயார் செய்து போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையிட்டு தந்த புதியம்புத்தூர் பொன்ராஜ் 66, மறவன்மடம் கிறிஸ்டோபர் 56, சிலுவைபட்டி இம்மானுவேல் 50, ரஹ்மத்துல்லாபுரம் காளீஸ்வரன் 61, புஷ்பா நகர் அசோகர் 65 ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 80க்கும் மேற்பட்ட போலி ரப்பர் ஸ்டாம்புகள்பறிமுதல் செய்யப்பட்டன.இந்திராநகர் மகாராஜன், பெருமாள் மற்றும் கம்ப்யூட்டரில் சான்றிதழ் தயாரித்து தந்த இருவரை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X