சித்திரைத் திருவிழா ஏப்.23ல் துவக்கம் மதுரையில் மே 2ல் மீனாட்சி திருக்கல்யாணம் மே 5ல் வைகை ஆற்றில் இறங்குகிறார் அழகர்
Added : மார் 29, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



மதுரை:மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.,23ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மே 2ம் தேதியும், வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி மே 5ம் தேதியும் நடக்கின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.,23ல் காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் நடக்கிறது.

இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். ஏப்.,30ல் இரவு 7:05 மணி முதல் 7:29 மணிக்குள் அம்மனுக்கு பட்டாபிேஷகம் நடக்கிறது.

மே 1ல் திக்குவிஜயம், மே 2ல் காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. மே 3ம் தேதி காலை 6:00 மணிக்கு மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மே 4ல் மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. அதேநாளில் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் அலங்காரத்தில் மதுரை வரும் அழகரை வரவேற்று எதிர்சேவை நடக்கிறது. மே 5ம் தேதி வைகையாற்றில் தங்க குதிரை வாகனத்தில் அழகர் இறங்குகிறார்.



12 ஆயிரம் பேர் காண ஏற்பாடு




திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண ஆடி வீதிகளில் தகர ஷீட் பந்தல் அமைக்கப்படுகிறது. திருக்கல்யாண மேடையில் 300 டன் குளிர்சாதன வசதியும், திருக்கல்யாண மண்டபத்தில் 100 டன் குளிர்சாதன வசதியும் செய்யப்பட உள்ளது. 6 ஆயிரம் பேர் முன்னுரிமை அடிப்படையில் இலவச தரிசனமாக தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். 2500 பேருக்கு ரூ.500 கட்டண சீட்டு வழங்கப்படுகிறது.

இவர்கள் வடக்கு கோபுரம் வழியாக செல்ல வேண்டும். 3500 பேருக்கு ரூ.200 கட்டண சீட்டு வழங்கப்பட்டு வடக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர்.

உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக இலவச பாஸ் கிடையாது. கோயில் வளாகம், வெளியே 20 இடங்களில் எல்.இ.டி., திரைகள் வைக்கப்பட உள்ளன. பக்தர்கள் வாகனங்கள் எங்கெங்கு நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து போலீசார் பின்னர் அறிவிப்பர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X