பட்டாணி இறக்குமதி தடையை நீக்க வேண்டும் மத்திய அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை
Added : மார் 29, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



மதுரை: பட்டாணி இறக்குமதியில் உள்ள தடையை நீக்க வேண்டும்' என, மதுரை தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக கூடுதல் செயலர் ஸ்ரீசந்தோஷ் குமார் சாரங்கியிடம் கோரிக்கை விடப்பட்டது.

டில்லியில் சங்க நிர்வாகிகள் வேல்சங்கர், சாய் சுப்ரமணியம், ஜெயப்பிரகாசம் கூறியதாவது: பட்டாணி இறக்குமதியில் உள்ள தடையை நீக்க வேண்டும். தீப்பெட்டிக்கு போட்டியாக சிகரெட் லைட்டர் இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என கூடுதல் செயலரிடம் வலியுறுத்தப்பட்டது.

உணவு பாதுகாப்புத்துறை சி.இ.ஓ., கமல வர்த்தனா ராவிடம் உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தங்களது பொருட்களை தாங்களே ஆய்வு செய்ய வேண்டும் என்பதை ஓராண்டாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். காலாவதி என்பதற்கான லேபிள் மாற்றுவதற்கு ஓராண்டு அவகாசம் தேவை.

ஆண்டுதோறும் லைசென்ஸ் புதுப்பிக்க வேண்டும் என்பதை ஒருமுறை லைசென்ஸ் பெற்றால் போதும் என மாற்றியமைக்க வேண்டும். இந்தியாவில் கிடைக்கும் தரத்தின் அடிப்படையில் கருப்பட்டி, வெல்லத்திற்கான தரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

சீனி கலந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, வெல்லத்திற்கு புதுபெயரிட்டு தரநிர்ணயம் செய்ய வேண்டும்.

கொரோனா தொற்றின் போது வணிகர்கள் கடைகளை திறந்து வணிகம் செய்ய முடியவில்லை. எனவே வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு விதித்த ரூ.30ஆயிரம் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம்.

மத்திய நிதித்துறை செயலர் சோமநாதனிடம் உணவு தானியங்களுக்கு வரி விலக்கு உள்ளது. வேளாண் விளைபொருட்களை பதப்படுத்தும் இயந்திரங்களுக்கான வரியை நீக்க வேண்டும்.

ரூ.ஒன்றரை கோடி வரையிலான ஒரு சதவீத வரிக்கு செலுத்த வேண்டிய கூட்டு வரியை தயாரிப்பாளர்களுக்கு நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம் என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X