பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பு அகழாய்வு செய்ய வலியுறுத்தல்
Added : மார் 29, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Emphasis on discovery of antiquities and excavations   பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பு அகழாய்வு செய்ய வலியுறுத்தல்

உடுமலை:உடுமலை அருகே விளை நிலத்தில் வரலாற்று ஆய்வாளர்களின் மேற்பரப்பு ஆய்வில், பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி உட்பட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.

திருப்பூர் மாவட்டம், உடுமலை சோமவாரப்பட்டியில், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் மேற்பரப்பு ஆய்வில் ஈடுபட்டனர். அங்குள்ள விளைநிலங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, பெருங்கற்காலத்தை சேர்ந்த, சிவப்பு பானை ஓடுகள், முதுமக்கள் தாழி சிதிலங்கள், பச்சை மணி உள்ளிட்ட அணிகலன்கள் மற்றும் கற்திட்டைகளை கண்டறிந்தனர்.

ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:

சோமவாரப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சின்னங்கள் அதிகளவு உள்ளன. குறிப்பாக, பெருங்கற்கால பண்பாட்டில் இறந்தவர்களுக்கு நினைவு சின்னமாக, கற்திட்டைகள் அமைத்துள்ளனர்.

இத்தகைய கற்திட்டைகள், முதுமக்கள்தாழி உள்ளிட்டவை இப்பகுதியிலுள்ள விளைநிலங்களில் பரவலாக கிடைக்கிறது. கடந்த, 2014ல் இப்பகுதியிலுள்ள மூவர், கண்டியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் பொருட்களை கண்டறிந்தனர். இதன் அடிப்படையில், அப்பகுதியில் அகழாய்வு செய்ய, மத்திய, மாநில அரசின் தொல்லியல் துறைகளுக்கு தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அனுப்பி வருகின்றனர்.

ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அகழாய்வு செய்தால், கொங்கு மண்டல பகுதியின் தொன்மையான வரலாறு தெரியவரும். இதுகுறித்து, உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X